Sunday, April 30, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 2 -

வரலாறு தளத்தில் திரு கலைக்கோவன் சொல்கின்றார்

//திருச்சியிலிருந்து ஐம்பத்து நான்கு கிலோமீட்டர் தொலைவில்
அமைந்துள்ளது. மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர் என்ற
மூன்று சிற்றூர்களாய் சிதறியுள்ளது இப்பழுவூர் மண்டலம்,
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பெரும்பழுவூர், அவனி
கந்தர்ப்புரம், சிறு பழுவூர் என்ற மூன்று ஊர்களின் முழுமையாய்த்
திகழ்ந்தது. இப்பழுவூரை ஆண்ட சிற்றரசர்களே பழுவேட்டரையர்கள்//

என்று 'பழுவூ 1' ல் திரு கலைக்கோவன் சொல்கின்றார்
http://www.varalaaru.com/Default.asp?articleid=116

ஆனால் பொன்னியின் செல்வனில் கல்கியவர்கள்

//உறையூருக்குப் பக்கத்தில் வட காவேரியின் வடகரையிலுள்ள
பழுவூர் அவர்களுடைய நகரம். விஜயாலய சோழன் காலத்திலிருந்து
பழுவேட்டரையர் குலம் வீரப்புகழ் பெற்றிருந்தது. ஆக்குடும்பத்தார்
சோழ மன்னர் குடும்பத்துடன் கொள்வினை கொடுப்பினை செய்து
வந்தனர். இது காரணமாகவும், அவர்களுடைய குலத்தொன்மை...//
http://www.chennainetwork.com/kalki/ps/ps1-1.html

இவ்வாறு சொல்கிறார்கள்
பழுவூர்கள் பல உண்டு உறையூருக்கு மேற்கே தென் காவேரியின்
தென்கரையிலும் மற்றும் சில பக்கங்களிலும் இருக்கலாம் .
இதில் எந்த ஆசிரியர் சொன்னது சரி

யாரவது என் ஐயம் தீர்க்க முடியுமா? இதற்கு பொற்கிழி கிடைக்காது.

Saturday, April 29, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ

தேசிகன் வலையில் தான் இதைச் சுட்டேன்

ஸ்ரீரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய புஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார்.
இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறுது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய ஸ்ரீரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பக் சொல்லிக் கொண்டுடிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருத்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.
சரி இதை ஏன் அந்த ஸ்ரீராமபிரான்
விபீஷணனிடம் அதைக் கொடுத்தான்
யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்

Saturday, April 01, 2006

சிவ காட்சி

பாரில் பக்த்தனக்கு காட்சிகொடுக்க அச்சிவன் செய்த காரியம்

'சிவபக்தியில் மேம்பட்டவனும் மிக்க புகழ்வாய்ந்தோனும் ஆகிய காடு வெட்டி யென்னும் ஓர் தலைவன் மதுரையிற் சொக்கலிங்கப் பெருமானைப் பணிதற்குச் சென்று வையையாற்றின் வடகரையை அடைந்தான். அப்பொழுது பாண்டியன் நாற் புரத்த மதிற் கதவையும், சாத்தித்தன் முத்திரையிட்டு, அவனுடன் படையெடுக்க முயன்றான். வையையும் பெருகிவிட்டது. இந்நிலைமையில் சிவபிரானானவர் காடு வெட்டியின் அன்புக்கு இரங்கி, நள்ளிரவில் வடக்கு மதில் வாயிலை முரித்தது வந்து, ஓர் இயந்திரத்தால் அவனையாற்றின்தென்கரையில் ஏற்று வித்து, மதில் இடித்தவழியாகக் கொண்டு சென்று, இருளை வெளிதாக்கி, அவனுக்குச் சோதி விமானத்தையும், தாம் தமது ஒப்பற்ற திருவுருவத்தையும் காட்டியருள, அவனம் கண்டுபோற்றி மனமுருகி நின்றான். நின்றவன் பின் பெருமானது கட்டளையால் விடியமுன்னே மதுரையை விட்டுப்போய் விட, ஆலவாயடிகளாரும் மதிலை புதுப்பித்துத் தமது இடபவிலச்சினையிட்டுப் பாண்டியனுக்குக் கனவிலே அறிவித்தருளினார்'

உண்மையான பக்திக்கு கிடைத்த தரிசணம்

திருவிளையாற்புராணம்

Friday, March 31, 2006

திருச்சிராப்பள்ளி

உறையூரைச் சேர்ந்த சோழன் கிள்ளியின் போர் யானை, அபூர்வமான ஒன்று.

அதிகாலையில் உறையூரிலிருந்து கிளம்பிய அந்த யானை, முதலில் காஞ்சி நகருக்குச் சென்றது, அதை ஒரு காலால் மிதித்தது. (அதாவது, அந்த நாடு சோழனுக்கு உரிமையானது !)

அடுத்ததாக, நீர் அலைகள் தத்திக் குதிக்கும், குளிர்ச்சியான உஜ்ஜயினி நகருக்குச் சென்று, அதை இன்னொரு காலால் மிதித்தது.

அதன்பின்னர், கடலைக் கடந்து, இலங்கை - ஈழத்தையும் ஒரு காலால் மிதித்தது.

இப்படியாக, எல்லா நாடுகளையும் தன் காலால் மிதித்து, வெற்றி கண்டபின், உறையூர் நகருக்குத் திரும்பியது அந்த யானை !

அந்தக் காலத்தில் அரசர்கள் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்நாட்டு மன்னர்களுடன் போரிட்டு, வென்று, தங்களின் ராஜாங்கத்தை விரிவுபடுத்திக்கொள்வார்கள் - சோழன் கிள்ளி, காஞ்சி, உஜ்ஜயினி, இலங்கை ஆகிய பகுதிகளை வென்றவன். அந்தச் செய்தியை, இந்தப் பாடல் சோழனின் யானையைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது !


கச்சி ஒருகால் மிதியா, ஒருகாலால்
தத்துநீர்த் தண்உஞ்சை தான்மிதியாப் பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமே,நம்
கோழியர்கோக் கிள்ளி களிறு.

(கச்சி - காஞ்சி நகரம்,
மிதியா - மிதிக்கும்
தத்து - தத்திக் குதிக்கும்
தண் - குளிர்ச்சியான
உஞ்சை - உஜ்ஜயினி நகரம்
பிற்றை - பின்னர்
கோழியர் - உறையூரைச் சேர்ந்தவர்கள்
கோ - அரசன்
களிறு - ஆண் யானை)

Wednesday, March 29, 2006

ஜமதக்னீ முனிவர்

மதக்னீஸ்வரர் ஆலயம் உள்ள கிளாங்காடு முதலில் கீழ் வெண்காடு எனப் பெயர் பெற்றிருந்ததாம்.

‘‘கிளா’’ மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியாய் இருந்ததால் ‘‘கிளாங்காடு’’ என்றும் மாறியதாகவும் வரலாறு. ஊரின் தென்புறத்தில் அனுமன் நதியும், வடபுறத்தில் கரும்புச்சாறு நதியும் (தற்போது கருப்பாநதி) பாய்ந்தோடி வளம் சேர்க்க, இரு நதிகளுக்கும் இடையிலுள்ள சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த கோவிலுக்குள் அமிழ்த சொரூபியாய், ஆனந்தச்சித்தனாய் லிங்க வடிவுருவில் லெளகீக வாழ்வுக்கு அருள் பாலிக்கும் ஜமதக்னீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் ஜமதக்னி முனிவரும், அவரது பத்தினி ரேணுகாதேவியும் மகன் பரசுராமன் மற்றும் முனிவர்களும் வாழ்ந்து வந்தனர். வினாயகரின் அருளால் ஆயிரம் கைகள் பெற்ற கார்த்த வீரிய அர்ச்சுனன் எனும் மன்னன், ஜமதக்னி முனிவர் வாழ்ந்த காட்டுப் பகுதிக்கு வேட்டையாடவந்தான். உச்சிநேரத்தில் களைத்து உணவு கிடைக்காமல் திண்டாடிய மன்னன், ஜமதக்னி முனிவரை சந்தித்தான்.

மன்னனுக்கும் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களுக்கும் பல்சுவை உணவு அளித்தார், மாமுனிவர்.

எப்படி இது சாத்தியமானது என அரசன் கேட்க, அத்தனைக்கும் காரணம் காமதேனு என்னும் தெய்வீகப் பசுதான் என, அடுத்து வரப்போகும் ஆபத்தை உணராமல் உரைத்தார் மாமுனிவர். நாடாளும் மன்னன் மனதில் சில நச்சு யோசனைகள் தோன்ற, காமதேனுவை என்னோடு அனுப்புங்கள் என கெஞ்சியும் பிறகு மிஞ்சியும் பேசினான்.

முனிவர் ஜமதக்னியோ, ‘‘அது தெய்வீகப்பசு... ரிஷிகளிடம் மட்டுமே வாழும். அதை உன்னோடு அனுப்பவும் முடியாது.’’ என்று மறுத்தார்.

அறிவிழந்த மன்னன் காமதேனுவைக் கைப்பற்ற தன் படைகளுக்குக் கட்டளையிட, மாமுனிவர் காமதேனுவுக்கு கண் ஜாடை காட்டினார் அவ்வளவுதான் தனது கொம்புகளை சுழட்டி சிலுப்பிய வேகத்தில் மன்னனின் படைகளுக்கு எதிராக மாபெரும் படையொன்று உருவெடுத்து மன்னனின் படைகளுக்கு மரணம் கொடுத்தபின் மறைந்து போயிற்று.

ஆயிரங்கைகள் கொண்டு தடுத்தும் அவமானம் நிகழ்ந்துவிட்டதே என வருந்திய மன்னன் வஞ்சம் வைத்தான்.

கிளா மரங்கள் அடர்ந்த சோலைக்குள் ஜமத்னி முனிவர் சிவலிங்கத்தின் முன் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். எதிர்பார்த்த சூழ்நிலை இயற்கையாய் கிடைக்க, வஞ்சம் வைத்த மன்னன் மாமுனியை சிரச்சேதம் செய்துவிட்டான். அப்போது அங்கு வந்த ரிஷிபத்தினியை இருபத்தொரு முறை வாளால் குத்திவிட்டு விரைந்தான்.

மகன் பரசுராமன் வரும்வரை தன் உயிரைத் தக்க வைக்குமாறு தெய்வத்தை வேண்டினார் ரிஷி பத்தினி. அதற்குள் பரிதவித்து வந்து சேர்ந்தான் பரசுராமன். நடந்ததையெல்லாம் மகனிடம் சொன்ன பின் உயிர் நீத்தார் ரேணுகாதேவி.

ஈமச்சடங்குகள் முடிந்த பதினாறாம் நாள் ‘‘காளியாக’’ அவதாரம் எடுத்த ரேணுகா தேவி, மகன் முன்தோன்றி அவனுக்கு மழு (கோடரி) ஆயுதம் தந்து மறைந்தாள். இருபத்தோரு தலைமுறைக்கு சத்திரிய வம்சத்தை கருவறுக்க சபதம் செய்தான் பரசுராமன். அதை நிறைவேற்றியபின், தன் தந்தை வழிபட்ட சிவமூர்த்திக்கு ஓர் ஆலயம் அமைத்தான்.

இப்போதும் இந்த சிவாலயத்தின் ஈசானிய மூலையில், ரேணுகாதேவி தனியாக வீற்றிருக்கும் சன்னதி இருக்கிறது. கங்கையைத் திரட்டி வந்து ஜமதக்னி முனிவரின் பூஜைக்கு உதவியதால் ‘‘கங்கைக்கு வாய்த்த அம்மன்’’ என்ற காரணப் பெயரும் இப்போது நிலவுகிறது.

ஜமதக்னி முனிவர் பூஜித்த சிவலிங்கம், கால நிகழ்ச்சிகளில் கட்டுண்டு, புதர்மண்டி, பூமிக்குள் அமிழ்ந்துவிட்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தைக் கட்டிய மன்னன் பராக்கிரம பாண்டியன் இவ்வழியாக குதிரையில் சென்றபொழுது கால் இடறி கீழே விழுந்த குதிரை எழுந்திருக்க மறுத்தது. அப்போது அசரீரியின் வாக்கு மன்னனுக்கு பூமியைத் தோண்டுமாறு கட்டளையிட, உடனே தன் படைகளைப் பணித்தான் மன்னன் பராக்கிரமன். அப்படித் தோண்டிய போது கிடைத்தது தான் ஜமதக்னி முனிவரால் பூஜிக்கப்பட்ட இந்த சிவலிங்கம். அதன் பலனாகவே இறைவனுக்கும் ஜமதக்னீசுவரர் எனவும் பெயரிட்டனர்.

ஜமதக்னீஸ்வரராய் வீற்றிருக்கும் இறைவன் கிழக்கு நோக்கியும், அதையொட்டி ஊரைபார்த்து தெற்கு நோக்கி அருள் பாலிக்கும் நல்ல மங்கை அம்பாளையும் சுற்றுவட்டார மக்கள் வணங்கி பல பேறுகளைப் பெற்றுள்ளனர்.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் படும் முன்பு சில காலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த இந்தக் கோவிலை கேரள தேவசம் போர்டு நன்கு கவனித்து வந்தது. இதற்கு ஆதாரமாய் வெளிச்சுற்று பிராகாரத்தில் தனது சங்கு முத்திரையை பதித்துள்ளது அப்போதைய திருவிதாங்கூர் தேவசம் போர்டு.

தற்போது கோயிலின் உட்புறமுள்ள தீர்த்தக்கிணறு தூர்ந்து, பிராகாரங்கள் மற்றும் உள்வெளிகள் தக்க பராமரிப்பின்றி கொஞ்சம் தடுமாறிப்போயுள்ளது. பக்தர்கள் இந்த அரிய கோயிலை ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அதற்கும் அவன் அருள்தானே வேண்டும்!

நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிளாங்காடு என்னும் கிராமத்திலுள்ளது இக் கோவில்.
குமுதம்
_ செந்தில் குமார

Thursday, March 23, 2006

எம்.எம். மாரியப்பா

இசைத் தென்றல் எம்.எம். மாரியப்பா

திருச்சி சின்னக்கம்மாளத்தெருவில் 11-4-1916 அன்று பாடகரான வை.முருகானந்தம் ஆச்சாரிக்கும் திருமதி. சின்னப்பொண்ணு அம்மாளுக்கும் ஒரே புதல்வராகப் பிறந்தவர் எம்.எம். மாரியப்பா அவர்கள். பள்ளியில் கல்வி கற்காமல் சுயமுயற்சியாலேயே எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். இளம் வயதிலேயே தனது தந்தையிடம் பக்திப் பாடல்கள், தேசியப்புரட்சிப் பாடல்கள், தேசத்தலைவர்களின் சுதந்திரப் போராட்ட கால வரலாற்றுப் பாடல்கள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு தனது திறமையின் மூலம் கலைத்துறையில் அடி எடுத்து வைத்தார். முக்கியமாக இவரது நாடகப் பணிக்கு திருச்சிராப்பள்ளி டி.எஸ். மாணிக்கம் பிள்ளை வழிகாட்டியாக இருந்தார்.

பால பாரத நாடக சபாவில் முதலில் சேர்ந்து நடித்த இவர் பின்னர் மதுரை ஸ்ரீராஜராஜேஸ்வரி நாடக சபா, மூவேந்தர் நாடகசபா, ஓம் சக்திவேல் நாடகசா, ராணிதுரை நாடகசபா, எம்.எம். மாரியப்பா இசை நாடகக் கலைக்குழு எனப் பல நாடகக் கலைக்குழுக்களை நிறுவியும் தாமே சொந்த மாகப் பல நாடகங்கள எழுதியும், அந்நாடகங்களில் நடித்தும். பாடியும் தம் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

சங்கரதாஸ் சுவாமிகளின் வள்ளித் திருமணம் கோபாலகிருஷ்ண பாரதியின் பரமபக்த நந்தனார் மற்றும் பாமா விஜயம், பவளக்கொடி, தூக்குத்தூக்கி போன்ற இசை நாடகங்களிலும், விரோதி, அசோகனின் காதலி போன்ற சரித்திர , சமூக நாடகங்களிலும் நடித்துள்ளார். இன்பவீடு, விரோதி, நாட்டுக்கு நல்லது போன்ற பல நாடகங்களை இவர் எழுதியும் உள்ளார். அல்லி விஜயம், ஜோதி அருணகிரிநாதர், ராஜா கோவிநாத் போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் பாடியும் நடித்தும்உள்ளார்.

1942 ஆம் வருடம் கோவை ஜுபிடர் பிக்ஸரில் மாதச் சம்பளத்திற்கு சேர்ந்துதிரைப்பட உலகின் முதல் பின்னணிப்பாடகராக அறிமுகமானார். 1947 இல் தாயரிக்கப்பட்டஅமரர் எம்.ஜி.ஆரின் முதல் படமான ராஜகுமாரி திரைப்படத்தில் அவருக்காக முதன் முதல் பல பாடல்களைப் பின்னணி பாடியுள்ளார். நடிகர் திலிகம் சிவாஜி கணேசனுக்கும் பின்னணிப் படியுள்ளளார். கொலம்பியா, எச்.எம்.வி. மாஸ்டர் போன்ற கிராமபோன் இசைத்தட்டுக் கம்பெனிகளுக்காக இவர் ஸ்பெஷல் பாடல்களையும் பாடி இரைத்தட்டுகளாக அவைகள் வந்துள்ளன.

இவரது தமிழ்பபணியைப் பாராட்டித் தந்தைப் பொரியார் 1945இல் தமிழ் இசை தென்றல் என்ற பட்டத்தினையும், சென்னை கவர்னர் சர்.ஆர்.சி அவர்கள் தங்கப்பதக்கமும், பாராட்டும், 1948 இல் திருவாரூர் முருகன் அடியார்கள் சார்பாக இசைமணி பட்டமும், திருச்சி ஐந்தொழிலாளர் சங்கம சார்பாக 1959 ல் கேடயமும் பாராட்டும், திருச்சி நற்றமிழ் சொற்பயிற்சி மன்றத்தினர் 1960இல் இயல் இசைத் தென்றல் பட்டமும் தந்துள்ளனர்.

தமிழ் அறிஞர்கள் பலரின் பாராட்டையும் மதிப்பையும் பெற்ற இவர், 1977இல் தமிழ் நாடு இயல் இசை நாடகமன்றம் சார்பில் கலைமாமணி பட்டமும் பொற்கிழியும் பெற்றுச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ்த் திரைப்பட உலகில் தமக்கென ஒரு தனிப் பாணியை வகுத்துக் கலை உலகிழல் பெரும் புகழ் எய்திய பாடகர், நடிகர் எம்.எம்.மாரியப்பா தம் 66 ஆம் வயதில் 14-1-1982 அன்று சமயபுரத்தில் அமரரானார். 1984இல் தமிழ் நாடு இயல் இசை நாக மன்றத்தில் இவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.

முருகானந்தத்தின் நடந்தாய் வாழியிலிருந்து

Tuesday, March 21, 2006

எம்.கே. பாகவதர்

ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்

திருச்சி பாலக்கரையில் 01-03-1910 அன்று பிறந்தவர் தியாகராஜர். படிப்பில் ஆர்வமற்ற இவர் 10 வயது முதலே விளையாட்டாக பஜனைப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். இவரது குரல் வளம், இனிமை, இசைஞானம் ஆகியவற்றைக் கண்ட இவரது பெற்றோர்கள் பொன்னுசாமி அய்யங்கார் என்பவரிடம் சங்கீதம் கற்க அனுப்பிவைத்தனர். (பாகவதர் ஆசாரி ஜாதியைச் சேர்ந்தவர்) பாடுவதோடு நடிக்கவும் ஆர்வம் கொண்ட இவர் தேவர்மன்றத்தில் பவளக்கொடி, வள்ளித்திருமணம் போன்ற நாடகங்கறில் முக்கிய வேடமேற்றுப் பாடி நடித்துள்ளார். வள்ளித்திருமணம் நடித்ததின் மூலம் தியாகராஜர், தியாகராஜ பாகவதர் ஆனார். தொடர்ந்து அவர் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. செட்டிநாடு வள்ளல் லேனா செட்டியார் பாகவதரை ஒப்பந்தம் செய்து தமிழ் நாடு முழுக்க நாடகங்களை நடத்தினார்.

அக்காலத்திய புகழ்மிக்க தாரகை எஸ்.டி.சுப்புலெட்சுமியுடன் சேர்ந்து இவர் நடித்த நாடகங்கள் பரவலான வரவேற்பைப் பெற்றதோடு திரைப்படத்துறையில் நுழையவும் வாய்ப்பேற்படுத்தி தந்தது. தியாகராஜர் நடித்த முதல் படம் பவளக்கொடி, திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் அபார வெற்றியைப் பெற்றுத் தந்தது புகழ்க் கொடி நாட்டினார். நவீன சாரங்கதாரா, சத்தியசீலா, அம்பிகாபதி, அசோக்குமார், சிந்தாமணி, ஹரிதாஸ் போன்று பல படங்கள் நூறுவாரம் ; இருநூறு வாரம் என்று ஓடி மக்களை வியப்படைய வைத்தன. ஹரிதாஸ் மூன்று தீபாவளியைக் கண்ட படம் என்று சாதனை படைத்தது. ஏழிசை மன்னர், செந்தமிழ் நடிகர் என்ற பட்டங்களை பெற்றவர். திரைப்படத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்தபோது இலட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இவரும் குற்றவாளியாக்கப்ட்டார்.

விடுதலை பெற்று வந்தும் இவர் நடித்தார் என்றாலும் முன்பு இருந்த வரவேற்பை இவரது படங்கள் பெறவில்லை. ஒரு மகாராஜாவைப் போல வாழ்ந்த இந்த இசைமேதை பின்னாளில் கண்பார்வை இழந்து சமயபுரத்தில் இருந்த காலத்தைக் கண்டு உருகாத கண்கள் இல்லை. இவருடைய மேதைமையைப் பெருமைப்படுத்தும் விதமாக அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அரசு கலையரங்கிற்கு எம்.கே.தியாகராஜ பாகவதர் கலையரங்கம் என பெயர் சூட்டினார்.

இவர் வீட்டில் இருந்தால் சாக்கடையில் அத்தர் ,ஜவ்வாது வாசணை வருமாம். எந்த பெண்ணாக இருந்தாலும் இவரது வசீகர பார்வையில் விழுந்து விடுவார்களாம் அழகான கண் எடுப்பான தோற்றம். மன்மதன் என்றால் இவர் தானாம். இவரது குரல் இனிமை, தங்கவண்ணத்தில் ஆடை, நெற்றியில் ஒரு பொட்டு. இத்தியாதியுடன் இருப்பார் இவரை பார்த ஆடவர்களே ஆசைபடுவார்களாம் சொல்லக்கேள்வி. இவரது உறவினர்கள் தான் எனது கிராமத்துக்கார்கள் சரஸ்வதி சபதம் என்ற கதையை எழுதியவர்கள் .


Monday, March 20, 2006

பி. இரத்தினவேலு தேவர்

திருச்சிராப்பள்ளி நகர வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியோர்கள் பலரில் நகராட்சித் தலைவராயிருந்த பி. இரத்தினவேல் தேவர் அவர்கள் முதன்மையானவர். 1883 ஆம் ஆண்டு பிராச்சிலையில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்தவர். எஸ்.பி.ஜி. பள்ளியிலும் பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

பொது வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேவர் 1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி வேட்பாளராகத் திருச்சிராப்பள்ளி நகரமன்ற உறுப்பினருக்குப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். பின்னர் நகரமன்றத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந் தெடுக் கப்பட்டார். 1924இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924முதல் 1946 வரை 4 முறை நகராட்சித் தலைவர் பொறுப்பேற்று நகர வளர்ச்சிக்கு அரும்பணியாற்றினார். 1946இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவர், பிற்காலத்தில் நீதிக்கட்சியோடு கருத்து வேறுபாடு கொண்டார். திலகரும், காந்தியாரும் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். காந்தியடிகளின் போதனைகளை மக்களிடம் பரப்பினார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அதனால் பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். ராஜாஜி மன்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் அன்புக்குப் பாத்திரராகவும் இருந்தார்.

இரத்தினவேல் தேவர், நகரமன்றத் தலைவராகப் பணியாற்றியபோது கம்பரசம் பேட்டையில் இருந்து நீரேற்று நிலையத்தை நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்பத்தி தனது சொந்த செலவில் விரிவாக்கம் செய்தார். அன்றைய மாகாண அரசின் நிதி இலாகா, தேவரின் செயலைக் கண்டித்து இவருக்குத் தாக்கீது அனுப்பியது. இதனை எதிர்த்து இலண்டன் பாராளுமன்றத்திற்குத் தேவர் முறையீடு செய்தார் லண்டன் பாராளுமன்றம் இவரது முயற்சியைப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியது. பத்திரிக்கைகளின் மூலம் இச்செய்தியினை அறிந்த மகாத்மாகாந்தி அடிகள் தேவரைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். திருச்சிராப்பள்ளிக்கு வந்த ஜவஹர்லால் நேரு இவரது இல்லம் வந்து உணவருந்திப் பாராட்டினார்.

திருச்சிராப்பள்ளி நகரக் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவராகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும், தேசியக் கல்லூரி நிரவாகக் குழுத் தலைவராகவும், இலங்கை தமிழர் யூனியன் கிரிக்கெட்குழுத் தலைவராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். இரத்தினவேல் தேவர் சிறந்த கிரிக்கெட் வீரர். திருச்சிராப்பள்ளியில் கிரிக்கெட் குழு அக்காலத்திலேயே இலங்கை சென்று பெரும் புகழ்பெற்றது. நகரின் குடிநீர்ப் பிரச்சினையைப் பெரிதும் தீர்த்தவர் தேவர்.10-6-48 இவர் இயற்கை எய்தினார்.

இவரது பெயரில் தான் தேவர்ஹால் உள்ளது அந்த இடம் தேவருக்குச் சொந்தமாகும்

மாநகராட்சிஅலுவலகமம் உள்ள இடமும் இவருக்குச் சொந்தமானது

சிந்தாமனி விற்பனைக்கூடமும் இவருக்குச் சொந்தமானது

இலங்கை அமைச்சர் தொண்மைமான் இவருக்கு உறவினராவார்

பசும்பொன் தேவர் திருமகனாரும் இவரது இல்லத்தில் கொஞ்சநாள் இருந்தார்

காந்தியடிகள் தன் கையால் நூற்ற சேலை ஒன்றை இவருக்களித்தார்

இவருக்கு சிலை வைக்கத்தான் எந்த அரசும் ஒப்புதல் வழங்கவில்லை

இதுதான் கொடுமையிலும் கொடுமை அவர் திருச்சி நகருக்களித்த சொத்துகள் அதிகம் அப்படிப் பட்டவருக்கு சிலை வைக்க அரசு தடுமாறுவது தான் காரணம் தெரியாத ஒன்று


Saturday, March 18, 2006

வீர விளக்கு வ.வே.சுப்பிரமணிய ஐயர்

இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளருமான வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர், வேங்கடேச ஐயர் - காமாட்சி தம்பதியினருக்கு மகனாக திருச்சிராப்பள்ளி வரகனேரியில் 1881 ஏப்ரல் 2 ஆம் நாள் பிறந்தார்.

தூயவளனார் கல்லூரியில் பி.. பட்டம் பெற்றுப் பின்னர் சென்னை சென்று ப்ளீடர் (வக்கில்) பரிட்சையில் முதல் பிரிவில் தேறி, ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.

பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த "அபிநவபாரத்" சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. இச்சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. .வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார்.

1909இல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். இதனால் வ.வே.சு உட்பட பலரும் தலைமறைவாயினர்.

லண்டனில் இருந்த வ.வே.சு மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் சுற்றிவிட்டு, 1910இல் இந்தியா வந்து புதுச்சேரியில் தங்கினார். இங்கு பாரதி, நீலகண்ட பிரம்மச்சாரி, .ரா. அரவிந்தர் போன்றவர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராட முன்வந்தார். இங்கு "தர்மாலயம்" என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். அவரால் இங்குப் பயிற்சிக் கொடுக்கப்பட்டவர் தான் கலெக்டர் ஆஷை கொன்ற வாஞ்சிநாதன். ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது.

1920ல் பொது மன்னிப்புப் பெற்று வ.வே.சு திருச்சிராப்பள்ளி வந்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரகனேரி இல்லம் வந்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். 1920இல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். இராஜதுவேஷ குற்றம் சாட்டப்பட்டு பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து பின்னர் விடுதலையானார். 1922இல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தையும் அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924இல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார்.

மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார். கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார். மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, கம்பராமாயணம் ஓர் ஆராய்ச்சி போன்ற நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் "லண்டன் கடிதம்" என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார். இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். .வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜுன் 4ல் அணைந்தது

சு. முருகானந்தத்தின் நடந்தாய் வாழியிலிருந்து

http://bharani.dli.ernet.in/pmadurai/mp102.html


Monday, March 13, 2006

வெக்காளியம்மன்


வெக்காளியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா அழைப்பிதழ் - திருச்சிராப்பள்ளி உறையூர்
நாள்: 17-03-2006 வெள்ளிக்கிழமை

உலகெலாம் உய்யவந்த உயர்சண்டி காளியவள்,
நிலவெய்யில் நீர் காற்று நிலையாக வளம்பெறவே,
குலமக்கள் குடியோங்க குவலயமும் தழைத்திருக்க,
தலம் கொண்டிவ் உறையுரின் தாய்தேவி வெக்காளியே!

மெய்யன்புடையீர்,
"ஊர் எனப்படுவது உறையூராம்" என்ற பண்டைத் தமிழர்களின் வரலாற்றுக்கு ஆதாரமான "தொல்காப்பியம்" என்ற நூலின் மூலம், கி.மு.300க்கும் முற்பட்ட, முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விறங்கியது என்ற பெருமை படைத்த பழமையான நகராக விளங்கித் தற்காலம் திருச்சிராப்பள்ளி மாநகரின் ஒரு பகுதியாக விளங்குகின்ற பெருமைக்குரிய நகர் உறையூர் நகர்.
இவ் உறையூர் நகரின் வடதிசையில், முற்காலச் சோழர்களின் மரபில் வந்த சோழன் பெருநற்கிள்ளியால் இன்றைக்கு ஈராயிரமாண்டுகளுக்கு முன்னர், "பத்தினிக் கோட்டம்" சமைத்து நித்தமும், வழிபாடுகள் செய்து வந்தான் என்ற செய்தியானது, சிலப்பதிகாரக் காவியத்தின், உரைபெறு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதின் மூலம் அறியப்படுகிறது. இப்பத்தினிக்கோட்ட வழிபாடே, நாளடைவில், கொற்றவை வழிபாடாகவும், பின்னர், நகரின் காவல் தெய்வமாகி " வெக்காளி வழிபாடாக" மாறி இன்றளவும், தன்னை நாடி வரும், அன்பர்களுக்கு "வினைக்கோள் பயம் நீக்கி, வேண்டும் வரம் அருளும் வெக்காளித் தாயாக" அமர்ந்து அருள் வழங்கி வருகின்றாள்.
பாலில் படுநெய் போலும், விறகிற் தீ போலவும், உட்கடந்திருக்கும் சக்தியை கலியுகத்தில், உருவடிவில், கண்கண்ட தெய்வமாக நாம் காலத்தை வழி நடத்தும் காளியாக நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர். யாதும் ஆகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்திருந்தாய் என்றபடி பல இடங்களில் கோயில் கொண்டுள்ள அன்னையானவள் வெட்கை, மழை, பனி, காற்று முதிலயவற்றிலிருந்து நம்மைக் காக்க வெட்ட வெளியில் அமர்ந்து உலகைக் காத்து அருளாட்சி செய்கிறாள் அன்னை வெக்காளியாக.
இத்தகைய பழமைச் சிறப்புடன் நல்லருள் கூட்டி நம்மையெல்லாம் காத்தருளுகின்ற " அன்னை வெக்காளியின்" உறைவிடமாம், இத்திருக்கோயிலில் அருட் கொடையாளர்களின் பேருதவியால் புதியதாக மூன்று நிலை இராஜகோபுரம் திறந்த வெளிகளாகவிருந்த திருக்கோயிலின் நாற்புறங்களிலும் பக்தர்களின் வழிபாட்டு நலனுக்காக மண்டபங்கள் விரிவு படுத்தப்பட்டும் கருங்கல்லால் கருவறை திருப்பணி மற்றும் பல்வேறு திருப்பணிகள் முடிக்கப்ட்டு நாளது திருவள்ளுவராண்டு 2037 பங்குனித் திஙகள் மூன்றாம் நாள் (17-03-06) வெள்ளிக்கிழமை துவிதி திதி சித்திரை உடு சித்தயோகம் கூடிய இனிய நற்பொழுதில் காலை 7.30 மணியிலிருந்து 8.10 மணிக்குள் மீன லக்கனத்தில் திருக்குடநன்னீராட்டு விழா மிகச் சிறப்புடன்ட நடை பெறவுள்ளது.
அன்னை வலை தளம்
மின் அஞ்சல் :vekkaliamman@sancharnet.in

Thursday, February 16, 2006

ஆங்கிலோ இந்தியர்

ஜெர்மன் நாஸி சிறையில் வாடிய ஆங்கிலோ இந்தியர்


திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலையில் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இ.எம்.ஜேம்ஸ் என்ற ஆங்கிலோ இந்தியர். இவர் 1941இல் திருச்சிராப்பள்ளியில் இருந்த பிரிட்டீஸ் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி பின் வட ஆப்பிரிக்காவிலும், கெய்ரோவிலும் ராணுவ சார்ஜென்டாகப் பணியாற்றியுள்ளார். இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியபோது இவர் டிரைபோலி (Tripoli) என்னும் ஊரில் 3000 ராணுவ வீரர்களுடன் ஜெர்மன் நாஸிப் படையால் கைது செய்யப்பட்டு இத்தாலியில் சிறை வைக்கப்பட்டார். இவருடன் நாராயணசாமி, ஹென்றி என்ற தமிழர்களும் உடன் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

இத்தாலியிலிருந்து பிரான்ஸுக்குக் கொண்டு செல்லும் வழியில் இம்மூவரும் நாஸிப் படைகயில் இருந்து தப்பி ஓடி, 15 நாட்கள் இரவு பகலாக அலைந்து மீண்டும் ஜெர்மன் படையிடம் சிக்கிக் கொண்டனர். ஐந்து நாட்கள் பண்டங்கள் ஏற்றும் கூட்ஸ் ரயில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு ஜெர்மனுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு நாஸி ராணுவ ஜெயிலில் கடுமையான வேலைகள் தரப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளாயினர். மீண்டும் ஒரு நாள் அங்கிருந்து தப்பி ஓடிப் பல மைல்கள் கடந்து ஒரு ஏழை விவசாயி பராமரிப்பில் பதுங்கியிருந்தனர். ஆனால் விதி வசத்தால் ஒரு ஜெர்மானியப்படையிடம் சிக்கி மீண்டும் ஜெர்மன் ராணுவ முகாமில் அடைக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டனர். 1943 ஜுன் 12 ந்தேதி அமெரிக்க ராணுவம் டாம்பெயர்(Dampaire) என்ற இடத்தில் குண்டுகள் வீசி ஜெர்மனியப் படைகளை ஓடச் செய்தனர். பின் அமெரிழக்கப் படைத்தளபதியின் உதவியால் லண்டனுக்கு அனுப்பப்பட்டு அங்கு மூன்று மாதம் சிகிச்சை பெற்று 1944 டிசம்பர் மாதம் பம்பாய்க்கு ஜேம்ஸ் அனுப்பப்பட்டார்.

ஜேம்ஸ் பிரிட்டீஸ் இராணுவப் படையில் இருந்து ஜெர்மனியில் சிறைபட்டிருந்த வேளையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அங்கு ஜேம்ஸ் உட்பட்ட இந்திய ராணுவ வீரர்களை அழைத்துப் பேசியுள்ளார். இன்று 90 வயதைக் கடந்துள்ள இ.எம்.ஜேம்ஸ் காது கேளாத நிலையில் இருந்து சென்ற ஆண்டு இறந்து விட்டார் அவரது குடும்பத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

திருச்சி பொன்மலையில் இருப்பதாக கேள்வி.


Saturday, February 11, 2006

திருச்சிராப்பள்ளி - 5 -

ரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருச்சிராப்பள்ளிக் கோட்டை நாயக்க மன்னர்கள், ஆற்காட்டு நவாப் முதலியோர் காலத்டதில் கட்டப்பட்டும், பிற்காலத்தில் பலரால் பாதுகாக்கப்பட்டும் வந்துள்ளது.

விஸ்வநாதர் காலத்தில் செப்பனிடப்பட்ட இக்கோட்டை,1616 இல் முத்துவீரப்பர் தமது தலைநகரைத் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றியபோது கோட்டை மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

1659-1682 இல் ஆட்சி செய்த சொக்கநாதர் தனது ஆட்சியின் தொடக்கக் காலத்தில் லிங்கம் நாயக்கர், செஞ்சியின் ஹாஜி உதவியுடன் திருச்சிராப்பள்ளிகோட்டையை முற்றுகையிட்டார். ஆனால் சொக்கநாதர் இம் முற்றுகையிலிருந்து திருச்சிராப்பள்ளியைக் காப்பாற்றினார்.

கி.பி. 1665 இல் திருச்சிராப்பள்ளிக் கோட்டை மைசூர் படைகளால் முற்றுகையிடப் பட்டது. அதேபோல் 1665 முதல் 1736 முடிய திருச்சிராப்பள்ளி மதுரை நாயக்க அரசின் தலைநகரமாக இருந்திருக்கிறது.

கி.பி.1733இல் பங்காரு நாயக்கர் அரசி மீனாட்சியைப் பதவியிலிருந்து நீக்க விரும்பி நகரைத் தாக்கினார். ஆனால் அரசி மீனாட்சியின் படைகள் நகரைப் பகைவரின் தாக்குதலிலிருந்து காத்தன. பங்காரு நாயக்கர் மறுபடியும் கோட்டையைத் தாக்கிய பொழுது, தென்னாட்டில் படையெடுப்பிலிருந்து ஆற்காட்டின் தளபதி சந்தாசாகிப்பின் உதவியை ராணி மீனாட்சி பெற்றார், ஆனால் சந்தாசாகிப் அரசி மீனாட்சியைக் காவலில் வைத்துவிட்டுத் கோட்டையைத் தனதாக்கிக் கொண்டார்.

கி.பி. 1741 இல் மராட்டியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு வென்றனர். ஆனால் கி.பி. 1743இல் ஹைதராபாத் நிஜாம் அசப்ஹ கோட்டையை முற்றுகையிட்டு, மராட்டியரிடம் இருந்து அதனைக கைப்பற்றினார்.

ஆற்காடு நவாப் அன்வாருதீன் கோட்டையைப் புதுப்பித்துக் கட்டினார். இவர் இறந்தபின் ஆற்காடு நவாப்பின் பதவிக்குப் போட்டி ஏற்பட்டபோது, நவாப்பின் மகன் முகமதலி தனது பாதுகாப்பிற்காக கோட்டைக்குள் புகுந்தார். இதனால் சந்தா சாகிப்பின் படைகள் 1751இல் திருச்சிராப்பள்ளிக் கோட்டையை முற்றுகையிட்டன.

ஆனால் முகமதலி ஆங்கிலேயரின் உதவியை பெற்றார். பகைவர்களால் எளிதில் காக்க முடியாதபடி கோட்டை பலம் மிக்கதாய் இருந்தது. கடைசியில் சந்தாசாகிப் தோலிவியுற்றுக் கொல்லப்பட்டார். 1752இல் திருச்சிராப்பள்ளிக் கோட்டை தாக்கப்பட்டது.

நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின் கோட்டைச் சுவர்கள் நாளடைவில் நலிவடைய ஆரம்பித்தன. ஆங்காங்குக் கற்கள் பெயர்ந்தும், சிரிலமடைந்தும், மரம், செடி, கொடிகள்ட வளர்ந்தும் இடிந்தும் போயின. அகழிகள், நீர் போக்குவரத்தின்மையாலும், தூர்ந்து போயின.

ஆதாரம் நடந்தாய் வாழி

தொடரும்...........

Wednesday, February 08, 2006

திருச்சிராப்பள்ளி - 4 -

'விஸ்வநாத நாயக்கரால்' மதுரை நாயக்க அரசு தோற்றுவிக்கப்பட்டபொழுது திருச்சிராப்பள்ளிப் பகுதி இவ்வரசின் கோட்டையைப் புதுப்பித்துப் பலப்படுத்தியது மட்டுமல்லாமல், தெப்பக்குளத்தைவெட்டியவரும் அவரே! நாகக்கர் ஆட்சிக் காலத்தழில் இந்நகர் பெரிழதும் மவளர்ச்சியடைந்தது. அதேபோல் இவர்களின் ஆட்சிக்காலத்தில் மதுரையும், திருச்சிராப்பள்ளியும் மாறி மாறித் தலைநகராக விளங்கின.

விசுவநாத நாயக்கருக்குப் பின் வந்த முத்துவீரப்ப நாயக்கர் கி.பி.1616 இல் தம் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். விஜய நகர மன்னர் 'இரண்டாம் வெங்கடன்' இறந்த பின் வாரிசுப்போட்டியில் யச்சம நாயக்கருக்கும், ஜக்கராயருக்கும் கி.பி.1616 இல் தலைநகரை மீண்டும் திருச்சிராப்பள்ளிக்கே மாற்றி இங்கே ஒரு மாளிகை கட்டி நகரை அழகுபடுத்தினார்.

சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்காலம் முதல், நாயக்க அரசு முடிவுற்ற காலம் வரை (கி.பி.1736) தருச்சிராப்பள்ளியே மதுரை நாயக்க அரசின் தலைநகராக இருந்தது. நாயக்கர் மரபில் குறிப்பிடத் தக்க அரசியார் இராணி மங்கம்மாள் ஆவார். ஸ்ரீரங்கம் காவிரிப் படித்துறையிலுள்ள அம்மாண்டபம் இந்த அரசியால் கட்டப்பட்டதே ! ஸ்ரீரங்கம் ராயகோபரத்திலிருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலை அம்மா மண்டபம் சாலை என்று இவர் பெயரலேயே இன்றும் விளங்குகிறது. டவுன்ஹால் கட்டிடங்களும் இவர் கட்டியவைகளேயாகும். தற்பொழுது வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், வட்ட வழங்க அலுவலகம், அருங்காட்சியகம், லோக்கல் பண்ட் ஆய்வலுவலகம் ,காவல் நிலையம், ஆவண பதிவலுவலகம், மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன.

நாயக்கர் ஆட்சிக்குப் பின் திருச்சிராப்பள்ளி ஆற்காட்டு நவாப்பின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இதற்குப்பின் கி.பி.1741 முதல் 1743 வரை மராட்டியரின் ஆட்சியில் மராட்டிய அரசின் பிரதிநியாக 'முராரிராவ்' என்பவர் ஆளுநராகத் திருச்சிராப்பள்ளிக்கு நியமிக்கப்பட்டார்.

கி.பி.1743 இல் ஹைதராபாத் நிஜாம் 'அசப்ஷா' எண்பதினாயிரம் குதிரைப் படையும், இரண்டு லட்சம் காலாட் படையும் கொண்டு தென்னிந்தியாவின் மேல் படையெடுத்து வந்து, திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டபொழுது புதுக்கோட்டை மீதும் படையெடுக்க உத்தேசித்திருந்தான். அதனையறிந்த கூனப்பட்டி , துழாய்குடி மற்றும் சில ஊர்களின் தலைவர்கள் அவனுடைய குதிரை முதலியவற்றைக் கொள்ளையடித்தனர் அவர்களைத் தண்டிக்கமாறு நைசாமால் அனுப்பப்பட்ட படைத்தலைவன் அவர்களிடத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் சமாதானமாய் திரும்பினான்.

இவர் கிரதிநிதியாக இருந்த 'குவாஜா அப்துல்லா' 1744 இல் இறந்தார். இவருக்குப் பின் ஆற்காட்டு நவாப் 'அன்வாரூதீன்' பொருப்பேற்றார். இவர் கோட்டையைப் புதுப்பித்துக் கட்டினார்.

கி.பி. 1749 இல் அன்பாரூதீன் இறந்த பின் நவாப்பின் பதவிக்கு அவர் மகன் முகமதலிக்கும், சந்தாசாகிப் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது. இப்பதவிப்போட்டிக் காலத்டதில் டகர்நாடகப்போர்கள் நடநட்தன. இதனால் திழருச்சிராப்பள்ளி பல தாக்குதல்களுக்கு உள்ளானது.

போர் நடந்த காலங்களில், திருச்சிராப்பள்ளி மலைக்கோயிலும், குகைக்கோயில்களும், வெடி மருந்துக்கிடங்குகளாக உபயோகிக்கப் பட்டன. கர்நாடக நவாப்பான முகமது அலி, இறந்த பின், அவரின் உறவுக்காரரும் வாரிழசுதாரருமான 'அஸில்-உல்-தெளலா' என்பவரும் ஆங்கிலேயர்களும் 30-07-1801 இல் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். அதனட்படி நவாப் ஆங்கிலேயரிடமிருந்து பென்ஷன் பெற்றுக் கெணர்டனர்.

ஆங்கிலேயர்கள் வசம் வந்த பகுதியில் திருச்சிராப்பள்ளியும் சேர்ந்திருந்தது. திருச்சிராப்பள்ளி ஆங்கிலேயர் கைக்கு வந்ததும். அதை நிர்வகிக்க ஒரு ஆங்கிலக் கலெக்டர் நியமிக்கப்பட்டார். அவர் தான் திருச்சிராப்பள்ளியின் முதல் கலெக்டர் 1801 ல் ஜான்வாலேஸ் (J. Wallace) ஆவார். இதன்பின் ன1947 ஆகஸ்டு 15 வரை ஆங்கிலேய கலெக்டர்கள் பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியாக இம்மாவட்டத்தை நிர்வாகம் செய்தனர்.

ஆங்கிலேயர் படைகொண்டு பல இந்திய பகுதிகளை பிடித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வில்லையென்றால் இன்று நாடு சிறு சிறு துண்டுகாளக பிளவுபட்டு போயிருக்கும் மேலும் அன்று முஸ்லீம் மன்னர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் அதிகமானவர்கள் மூஸ்லீம் மதம் மாறியிருக்குவும் கூடும்.


தொடரும் . . . . . . . . . .

ஆதாரம் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரம்

நடந்தாய் வாழி

திருச்சிராப்பள்ளி - 3 -


அரசியல் வரலாறு

சங்க காலத்தில் உறையூரைத் தலைநகராக் கொண்டு ஆண்ட சோழ மன்னர்கள் காந்தமன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன், உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி. கரிகாலன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், நலங்கிள்ளி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, வேற்பஃறடக் கைப்பெருவிரற்கிள்ளி, செங்கணான் நல்லடி என்போராவர். இவர்களை முற்காலச் சோழர்கள் எனலாம். இவர்களுக்குப்பிறகு களப்பிரர்கள் வருகையில் சோழராட்சி முடிவுற்றது. களப்பிரர்கள் கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

களப்பிரர்களுக்குப்பின் சோழ நாட்டை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். இவர்களில் முக்கியமானவர் முதலாம் மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் ஆவார்கள். கி.பி.600-630 வரை ஆட்சி செய்த முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில், திருச்சிராப்பள்ளி பல்லவ அரசின் தெற்கு எல்லையாக இருந்திருக்கிறது. மலைக்கோட்டையில் மகேந்திர் வர்மன் குகைக் கோயில்களை அமைத்தான். அவை "லலிழதாங்குர பல்லவவேசுர கிரஹம்" என அழைக்கப்படுகின்றன. பெருவளநல்லூரில் சாளுக்கிய மன்னன் விக்கிரம ஆதித்தனைப் பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மன் எதிர்த்து போரிட்டுள்ளான். முசிரிக்கருகழிலுள்ள மகேந்திர மங்கலம், திருவெள்ளறையில் காணப்படும் இரண்டாம் நந்திவர்மனின் கல்வெட்டுகள், லால்குடி, ஆலம்பாக்கம் பகுதியிலுள்ளபல்லவர்காலத்துக் கல்வெட்டுகள் - இவைகள் இம்மாவட்டத்தில் பல்லவர்களின் ஆளுகையைப் பறைசாற்றுகின்றன. கி.பி. 650 முதல் 860 வரை பல்லவப் பேரரசுக்கு உட்பட்டு முத்தரையர்கள், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டைப் பகுதிகளை ஆட்சி புரிந்தனர்.

முத்தரையர்களில் சாத்தன் மாறன், குவாவன் மாறன், குலாவாஞ்சாத்தான், சுவரன் மாறன், சாத்தம் பூதி, சாத்தம் பழியிலி போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் செந்தலை என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்களுக்குப் பின் வந்த இளைய பரம்பரையினர் மலையடிப்பட்டியை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர்.

கி.பி.9 ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஆதித்த சோழன் காவிரியின் இருகரைகளிலும் பல கோயில்களைக் கட்டியுள்ளான் என அன்பில் செப்பேடு கூறுகிறது. சுந்தர சோழன், உத்தம சோழன் முதலிய சோழ மன்னர்கள் பெருங்குடி, பாச்சூர், கோபுரப்பட்டி போன்ற ஊர்களை நிர்மாணித்துள்ளனர். பராந்தக சோழனின் கல்டிவெட்டுகள் அன்பில், ஸ்ரீரங்கம், திருச்செந்துறை, உய்யக்கொண்டான் திருமலை. திருவெறும்பூர், அந்த நல்லூர் முதலிய கோயில்களில் காணப்படுகின்றன.

முதலாம் இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் போன்ற பிற்காலச் சோழ மன்னர்களின் கல்வெட்டுகக்களும், பல கோயில்களுக்கு அவர்கள் அளித்த நிவந்தங்களும், மாவட்டத்தில் பரவலாக் காணப்படுகின்றன.

தஞ்சையைத் தலைநகராக் கொண்டு ஆட்சி செய்த சோழர்கள் காலத்துக்குப் பின் பாண்டியர்கள், சோழ நாட்டைக் கைப்பற்றி அரசாண்டனர். அதுபோது பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் திருச்சிராப்பள்ளி இருந்தது. மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுக்கள் ஸ்ரீரங்கம், திருவெள்ளரை, திருவானைக்காவல்கோயில்களில் பாண்டிய மன்னர்கள் கோபுரங்களை எழுப்பியுள்ளனர்.

பாண்டிய மன்னர்களுக்குப் பின் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் ஹொய்சளர்கள் படையெடுத்து வந்து ஆட்சியைக் கைப்பற்றிச் சிலகாலம் அரசாண்டனர். ஹொய்சாள மன்னர் வீரசோமேஸ்வரன் சமயபுரத்தைச் சேர்ந்த கண்ணூர் பகுதியைத் தலைநகரமாகக் கொண்டு பதின் மூன்றாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தான். இங்குள்ள சிவன்கோயிலை வீரசோமேஸ்வரன் கட்டியுள்ளான். இவனது மகன் வீரராமனாதன் காலத்தில் கண்ணனூர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருவெள்ளரை கோயில்கள் பெரும் சிறப்புப் பெற்றிருந்தன.

ஸ்ரீரங்கத்திலுள்ள கலையழகு மிக்க வேணுகோபலசன்னதி வீரராமனாதன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். மேலும் இம்மன்னன் கண்ணனூர் நகருக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிசெய்து தந்துள்ளான் என்ற செய்தியை இங்கு நடந்த அகழ்வாராய்ச்சிமூலம் அறிகிறோம்.

1310 இல் டெல்லி சுல்தானின் படைத்தளபதி மாலிக்காபூர் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்து உறையுரை வென்றான். இதன் பின்னர் சில காலம் தமிழகத்தில் மொகலாயர் ஆட்சி நிலவியது. கி.பி. 1371 இல் விஜய நகரத்திலிருந்து 'குமாரகம்பனர்' படையெடுத்து வந்து. ஆட்சியைக் கைப்பற்றினார். இதனால் தமிழகம் விஜயநகரப்பேரரசின் கீழ் வந்தது. பின்னர் மதுரை நாயக்கர்களின் ஆட்சி தொடங்கிற்று.

ஆதாரம் நடந்தாய் வாழி

Tuesday, February 07, 2006

திருச்சிராப்பள்ளி - 2 -



சிரா என்ற சமண முனிவர் இங்கு வாழ்ந்து வந்ததால் அவர்கள் இருக்கும் இடம் பள்ளி என்பதாலும் சிராப்பள்ளியாகிற்று அதற்கு அடை மொழியாகா திரு வைச் சோர்த்து திருசிராப்பள்ளி என பெயர் வந்ததாக வரலாறு கூறகின்றது.

அந்த மலையின் மேல் எழுந்தருளியிருக்கும் சிவன் தாயும்மானவர் என வழங்கப்படுகிறது. அதற்கு காரணம் ஒரு செட்டியார் குளத்துப் பெண் கருவுற்றிருந்தாள் . அப்பொழுது அவளது தாயார் மகளைக் காண காவிரி யாற்றைத் தாண்டி வரவேண்டும் மகளின் பேருகாளத்தில் வந்த நேரத்தில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அத்தாயாரால் வர இயலவில்லை எனவே அத்தாய் ,'மலைமேலிரு்கும் இறைவா எனது மகளை நீ தான் காக்கவேண்டும் ' என சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

சில நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்த பின் வந்த தாய்," அம்மா என்ன குழந்தை பெற்றாய் நான் இல்லாமல் போனேனே நல்லபடியாக இருக்கின்றாய என பேரக்குழந்த எப்படி இருக்கிறது" என ஆவலுடம் குசலம் விசாரிக்க . மகள், ' அம்மா நீ அப்போவே வந்து எனக்கு எல்லா வேலைகளையும் செய்து கொடுத்தாயே புதுசா என்ன கேக்ற ' என கேட்கவும் தாயாருக்கு ஒன்றும் தெரியாமல் மேலே பார்க்கும் போது சிவன் அங்கே காட்சி கொடுத்து உனக்காக நான் உன் வேலையைப் பார்த்தேன் என கூறிமறைந்தார். அதானல் தான் தாயும் ஆனார் என பெயர் வந்தது.