Sunday, April 30, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 2 -

வரலாறு தளத்தில் திரு கலைக்கோவன் சொல்கின்றார்

//திருச்சியிலிருந்து ஐம்பத்து நான்கு கிலோமீட்டர் தொலைவில்
அமைந்துள்ளது. மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர் என்ற
மூன்று சிற்றூர்களாய் சிதறியுள்ளது இப்பழுவூர் மண்டலம்,
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பெரும்பழுவூர், அவனி
கந்தர்ப்புரம், சிறு பழுவூர் என்ற மூன்று ஊர்களின் முழுமையாய்த்
திகழ்ந்தது. இப்பழுவூரை ஆண்ட சிற்றரசர்களே பழுவேட்டரையர்கள்//

என்று 'பழுவூ 1' ல் திரு கலைக்கோவன் சொல்கின்றார்
http://www.varalaaru.com/Default.asp?articleid=116

ஆனால் பொன்னியின் செல்வனில் கல்கியவர்கள்

//உறையூருக்குப் பக்கத்தில் வட காவேரியின் வடகரையிலுள்ள
பழுவூர் அவர்களுடைய நகரம். விஜயாலய சோழன் காலத்திலிருந்து
பழுவேட்டரையர் குலம் வீரப்புகழ் பெற்றிருந்தது. ஆக்குடும்பத்தார்
சோழ மன்னர் குடும்பத்துடன் கொள்வினை கொடுப்பினை செய்து
வந்தனர். இது காரணமாகவும், அவர்களுடைய குலத்தொன்மை...//
http://www.chennainetwork.com/kalki/ps/ps1-1.html

இவ்வாறு சொல்கிறார்கள்
பழுவூர்கள் பல உண்டு உறையூருக்கு மேற்கே தென் காவேரியின்
தென்கரையிலும் மற்றும் சில பக்கங்களிலும் இருக்கலாம் .
இதில் எந்த ஆசிரியர் சொன்னது சரி

யாரவது என் ஐயம் தீர்க்க முடியுமா? இதற்கு பொற்கிழி கிடைக்காது.

2 comments:

துளசி கோபால் said...

//இதற்கு பொற்கிழி கிடைக்காது.//

இப்படிச் சொன்னா யாரும் ஐயத்தைத் தீர்ப்பாங்களா?

ENNAR said...

அக்காதான் தீர்க்கனும்