Sunday, July 30, 2006

பஹ்ரைனில் தீவிபத்து

இன்றைய செய்தி: தினமலரில்

மனாமா (பஹ்ரைன்): பஹ்ரைன் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 16 இந்தியர்கள் பலியாயினர்.

மனாமா பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர் முகாமில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 5 மணி அளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 16 இந்தியர் பலியாயினர். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார். சுமார் 80 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இறந்தவர்களில் பலர் ராயல் டவர்ஸ் கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள் என பஹ்ரைன் நாட்டிற்கான இந்திய துõதர் பாலகிருஷ்ணன் ஷெட்டி தெரிவித்தார். மூச்சு திணறல் காரணமாகவே பலர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

இந்த முகாமில 218 பேர் தங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் 350க்கும் மேற்பட்டோர் இருந்ததாக அங்குள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக அந்த நாட்டில் உள்ள இந்திய துõதரகத்துடன் மத்திய அரசு தொடர்பு கொண்டது. இதையடுத்து, பலியானவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


.


.

Thursday, July 27, 2006

ராஜீவை தாக்கியவனின் வாகுக் மூலம்



19 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது "இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் தலைக்குத்தான் இலக்கு வைத்துத் தாக்கினேன். அது மரணத்தை ஏற்படுத்தக் கூடியது- அதுவே என் நோக்கம்" என்று தாக்குதலை நடத்திய சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த பேரின வெறியரான விஜித ரோகன விஜயமுனி பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளார்.

Wednesday, July 26, 2006

சிவாஜி கணேசன்

இருந்தது. தங்கவேலுவை பாம்பு கடித்துவிட்டது என்பதை சிவாஜி உணர்ந்து கொண்டார். அலறிக்கொண்டிருந்த தங்கவேலுவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டார். தங்கவேலுவின் தாயாரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். அங்குள்ளவர்கள், வைத்தியரை அழைத்து, தங்கவேலுவுக்கு தகுந்த சிகிச்சை அளித்தார்கள். தங்கவேலு பிழைத்துக்கொண்டார். பிறகு கிராமவாசிகளின் உதவியுடன் சிவாஜியும், தங்கவேலுவும், அவர் தாயாரும் பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து திருச்சிக்கு போய்ச்சேர்ந்தார்கள்.

Friday, July 14, 2006

வவுனியாவர் விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் ஈழமக்கள் விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த இயக்கத்தை சேர்ந்த பிரமுகர் ரத்தினம் ஸ்ரீகண்டராஜா கொல்லப்பட்டார்.

இன்னொரு இடத்தில் இதேபோல் நடந்த மோதலில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமிழர் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். கொல்லப்பட்ட 2 பேர் உடல்களையும் போலீசார் மீட்டனர்.

ஏன் ஒரு உறையில் இரண்டு வாள் இருக்கக்கூடாதெனவா?

Tuesday, July 11, 2006

பணத்தூது

"வாழ்வதும் உன்னுடைய வாழ்வாமே வாழ்வொழித்துத்
தாழ்வதுவும் உன்னுடைய தாழ்வாமே--கூழ்குடித்துக்
கட்டப் புடைவையின்றிக் கந்தையுமாய்ச் சென்றுசெலவர்
கிட்டப் பலகாலும் கெஞ்சிப்போய் -- முட்டமுட்டத்
தாங்குவா ரற்றுத் தடுமாறி ராப்பகலாய்
ஏங்குவார் ஏக்கம்உன் ஏக்கமே--ஓங்கும்
பணமென்னும் உன்னைப் படைக்காத சென்மம்
பிணமென்பர் கண்டாய் பெரியோய்"

இதற்கு விளக்கம் தேவையில்லை

Monday, July 10, 2006

சீதையின் தூது

"மலையே மரனே மயிலே குயிலே
மலையே பிணையே களிறே பிடியே
நிலையா உயிரே நிலைதே றினிர்போய்
உலயா வலியார்உழைநீர் உரையீர்"

'மலைகளே, மரங்களே, மயில்களே, குயில்களே, மான்களே, மற்றுமுள்ள உயிர்களே! நீங்களே என் நாயகரிடம் சென்று என் நிலைமையை எடுததுரைக்க வேண்டும்' என்று கூறுகின்றாள். அந் நிலையில் விரிந்து பரந்த கோதாவரி யாற்றின் மீது விமானம் விரைந்து செல்கின்றது. அவ்வாற்றைப் பார்த்துச் சீதை போசுகிறாள்:
"கோதா வரியே குளிர்வாய் குழைவாய்
மாதா அனையாய் மனனே தெளிவாய்
ஓதா துணர்வார் உழைஓ டினைபோய்
நீதான் வினையேன் நிலைசொல் லலையோ"

என்று வின்னப்பம் செய்கிறாள்.
இங்ஙனம் அறியும் பொருள்களையும் அறியாப் பொருள்களையும், அசையும் பொருள்களையும், அசையாப் பொருள்களையும், பேசும் உயிர்களையும், பேசாப் பிராணிகளையும் நோக்கித் துன்பமுற்றவர்கள் உரையாடுதலால் அன்னார் மனத்திலு:ள்ள ஆற்றாமை ஒருவாறு தீரும்; உளளத்தைக் கவர்ந்து எழுகின்ற உணர்ச்சிக்கு ஒரு போக்கு விட்டவாறாகும்.

Saturday, July 08, 2006

சம்பந்தரின் நாரைத் தூது

திருச்செங்காட்டாங் குடியிலே கோயில் கொண்டருளும் தலைவனிடம் செங்கால் நாரையைத் தூதனுப்புகின்றார் திருஞானசம்பந்தர்.
"கான் அருகும் வயலருகும் கழியருகும் கடலருகும்
மீனஇரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேன் அமர்தார்ச் சிறுத்தொண்டன் செய்காட்டங் குடிமேய
வான் அமரும் சடையார்க்குஎன் வருத்தம் சென்றரையாயே"

என்பது அவர் பாடிய தேவராத் திருப்பாசுரம் 'வளமார்ந்த சோலைகளிலும், வயல்களிலும், கடற்கரைகளிலும் வயிறார இரை கொள்ளும் இள நாராய்! சிறுத்தொண்டன் பணி செய்த திருச்செங்காட்டங்குடியில் என்னையாளுடைய தலைவன் அமர்ந்திருக்கின்றாரன். அவனைக் காணாது நான் வாடி வருந்துகின்றேன். சடைமுடி சூடிய அப் பெருமானிடம் போந்து என் வருத்தத்தை எடுத்துரையாயோ ' என்று தலைவி முறையில் வேண்டுகின்றார் திருஞான சம்பந்தர்.

நாரைத் தூது

ஓர் ஏழைப் புலவர் சோழ நாட்டிலுள்ள சத்திமுற்றத்தை விட்டு, பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரைக்குச் சென்றார்; பாண்டி மன்னனைக் கண்டால் கலிதீரும் எனறு கருதி மாளிகையின் வாயிலை அடைந்தார். ஆனால் உள்ளே செல்ல முடியவில்லை. காலமோ கார் காலம். போர்க்த்துக்கொள்ள ஆடையின்றி வாடையால் நடுங்கினார் புலவர்; பொதுவிடமாகிய அம்பலத்திற் போந்த மாலைப்பொழுதில் மனம் வருந்தியிருந்தார். வறுமை நோயால் வாடிப் பாடுபடும் தன் மனைவியின் துயரம் அவர் மனத்திலே பொங்கி எழுந்தது. அப்பொழுது அவர் ஆகாய வழியாக ஒரு நாரை தன் பெடையோடு வடக்கு நோக்கிப் பறந்து செல்லக் கண்டார். அந்ரையை நயந்து நோக்கி தம மனைவியிடம் தூதுவிட்டார். வருமையில் தானே பாடல் வரும். சேர்ந்தே இருப்பது வருமையும் புலமையும் தானே.
"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயுநின் பெடையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி

பாடுபார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
போழையு ளிருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே"

நாம் பள்ளியில் படித்தது தான் பலமுறை நமது நாவில் வலம் வந்த பாடல் தான்
நகர் வலம் வந்த மன்னனுக்கு தனது ஐயம் இந்த பாடலினால் நீங்கியதால் தனது ரத்தின கம்பளத்தை புலவருக்கு கொடுத்து விட்டு காலையில் வரச்சொல்லி சன்மானம் கொடுத்தார்

Friday, July 07, 2006

ஆட்சி மாற்றமும் நலத்திட்டமும்

சென்ற 2001 ஆம் ஆண்டு திமுகாவின் ஆட்சியில் தமிழ் நாடு விவசாய தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலத்திட்டம் அவசரஅவசர மாக கொண்டுவரப்பட்டது. ஆட்சி மாறவும் அதை அம்போ என விட்டு விட்டது அதிமுக அரசு. 2005 ல் அதிமுக அரசு கொஞ்சம் மாற்றத்துடன் கொண்டு வந்து செயல் படுத்துவதற்குள் இந்த அரசும் போய்விட்டது மறுபடியும் திமுக அரசு வந்து அந்த இரண்டு திட்டத்தையம் ரத்துசெய்து விட்டு ஒரு புதிய திட்டமாக கொண்டு வரவிருக்கிறது. இதன் நிலை எப்படியோ? அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.

Wednesday, July 05, 2006

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?

கோகினூர் வயிரம்
மயிலாசனம்
ராஜராஜசோழன் சிலை
இவைகள் கொள்ளை போனதே!!!!

ராஜராஜ சோழனின் சிலை குறித்த ஒரு சுவையான செய்தி நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசர் சிவாஜி ராஜா போன்ஸ்லே என்பவர் 1855ஆம் ஆண்டு ஆண் வாரிசின்றி இறந்து போனார். டல்ஹவுஸியின் 'வாரிசின்மையால் அரசு அதிகாரம் இழத்தல்' என்ற கோட்பாட்டின்படி ஆங்கிலேயக் கும்பினி அரசு தஞ்சைப் பகுதியின் நிர்வாகத்தைத் தானே ஏற்றது. இதனை எதிர்த்து மராட்டிய அரசி காமாட்சி அம்பா பாயி சாகேப் முதலானோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து 1916ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. நீதிமன்றத் தீர்ப்பின்படி தஞ்சைப் பெரிய கோயில் உட்பட 108 கோயில்களின் நிர்வாகம் மூத்த இளவரசர் எனப்பட்ட பெண் வழி வாரிசு ஒருவருக்கு உரியதாயிற்று. அந்த ஆண்டிலேயே தஞ்சைப் பெரிய கோயிலில் இருந்த ராஜராஜ சோழனின் சமகாலச் செப்புப் படிமம் விற்கப்பட்டது. அது இருந்த இடத்தில் உள்ளூர் ஸ்தபதி ஒருவரால் புதிதாகச் செப்புப் படிமம் ஒன்று வார்க்கப்பட்டு, அதன் பீடத்தில் "தஞ்சாவூர்ப் பெரிய கோயில் ராசா ராசேந்திர சோழ ராசா" என்றும் பொறிக்கப்பட்டது. இப் புதிய செப்புப் படிமமே ராஜராஜ சோழனின் பழைய செப்புப் படிமம் என்று தவறாகக் கருதப்பட்டு பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரால் இதற்கு முடிசூட்டும் விழாவும் நடத்தப்பட்டது. பூர்விகச் செப்புப் படிமம் தற்போது அஹமதாபாதிலுள்ள சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ளது என்று தொல்லியல் கலை வரலாற்று அறிஞர் திரு. சி. சிவராம மூர்த்தி கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
திண்ணையில் எஸ். இராமச்சந்திரன்
இவைகளைக் கொண்டு வரமுயற்சிக்க வேண்டாமா?