Tuesday, March 21, 2006

எம்.கே. பாகவதர்

ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்

திருச்சி பாலக்கரையில் 01-03-1910 அன்று பிறந்தவர் தியாகராஜர். படிப்பில் ஆர்வமற்ற இவர் 10 வயது முதலே விளையாட்டாக பஜனைப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். இவரது குரல் வளம், இனிமை, இசைஞானம் ஆகியவற்றைக் கண்ட இவரது பெற்றோர்கள் பொன்னுசாமி அய்யங்கார் என்பவரிடம் சங்கீதம் கற்க அனுப்பிவைத்தனர். (பாகவதர் ஆசாரி ஜாதியைச் சேர்ந்தவர்) பாடுவதோடு நடிக்கவும் ஆர்வம் கொண்ட இவர் தேவர்மன்றத்தில் பவளக்கொடி, வள்ளித்திருமணம் போன்ற நாடகங்கறில் முக்கிய வேடமேற்றுப் பாடி நடித்துள்ளார். வள்ளித்திருமணம் நடித்ததின் மூலம் தியாகராஜர், தியாகராஜ பாகவதர் ஆனார். தொடர்ந்து அவர் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. செட்டிநாடு வள்ளல் லேனா செட்டியார் பாகவதரை ஒப்பந்தம் செய்து தமிழ் நாடு முழுக்க நாடகங்களை நடத்தினார்.

அக்காலத்திய புகழ்மிக்க தாரகை எஸ்.டி.சுப்புலெட்சுமியுடன் சேர்ந்து இவர் நடித்த நாடகங்கள் பரவலான வரவேற்பைப் பெற்றதோடு திரைப்படத்துறையில் நுழையவும் வாய்ப்பேற்படுத்தி தந்தது. தியாகராஜர் நடித்த முதல் படம் பவளக்கொடி, திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் அபார வெற்றியைப் பெற்றுத் தந்தது புகழ்க் கொடி நாட்டினார். நவீன சாரங்கதாரா, சத்தியசீலா, அம்பிகாபதி, அசோக்குமார், சிந்தாமணி, ஹரிதாஸ் போன்று பல படங்கள் நூறுவாரம் ; இருநூறு வாரம் என்று ஓடி மக்களை வியப்படைய வைத்தன. ஹரிதாஸ் மூன்று தீபாவளியைக் கண்ட படம் என்று சாதனை படைத்தது. ஏழிசை மன்னர், செந்தமிழ் நடிகர் என்ற பட்டங்களை பெற்றவர். திரைப்படத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்தபோது இலட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இவரும் குற்றவாளியாக்கப்ட்டார்.

விடுதலை பெற்று வந்தும் இவர் நடித்தார் என்றாலும் முன்பு இருந்த வரவேற்பை இவரது படங்கள் பெறவில்லை. ஒரு மகாராஜாவைப் போல வாழ்ந்த இந்த இசைமேதை பின்னாளில் கண்பார்வை இழந்து சமயபுரத்தில் இருந்த காலத்தைக் கண்டு உருகாத கண்கள் இல்லை. இவருடைய மேதைமையைப் பெருமைப்படுத்தும் விதமாக அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அரசு கலையரங்கிற்கு எம்.கே.தியாகராஜ பாகவதர் கலையரங்கம் என பெயர் சூட்டினார்.

இவர் வீட்டில் இருந்தால் சாக்கடையில் அத்தர் ,ஜவ்வாது வாசணை வருமாம். எந்த பெண்ணாக இருந்தாலும் இவரது வசீகர பார்வையில் விழுந்து விடுவார்களாம் அழகான கண் எடுப்பான தோற்றம். மன்மதன் என்றால் இவர் தானாம். இவரது குரல் இனிமை, தங்கவண்ணத்தில் ஆடை, நெற்றியில் ஒரு பொட்டு. இத்தியாதியுடன் இருப்பார் இவரை பார்த ஆடவர்களே ஆசைபடுவார்களாம் சொல்லக்கேள்வி. இவரது உறவினர்கள் தான் எனது கிராமத்துக்கார்கள் சரஸ்வதி சபதம் என்ற கதையை எழுதியவர்கள் .


No comments: