Friday, May 05, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 5 -

கரிகாலன் காவிரிக்கு கரை கட்டுவித்தான் . சிற்றரசர் கலரும் அவன் ஆணையை ஏறறுக் கரை அமைத்தனர். பிரதாபருத்திரன் என்னும் மன்னன் காவிரிக்குக் கரை எடுக்க வராமல் ஆரவாரித்தான். அவனுக்கு நெற்றியிலும் ஒரு கண் இருந்ததாம்! கரிகாலன் பிரதாபருத்திரனது படத்தை எழுதி வருமாறு ஓவியனுக்குக் கட்டளையிட்டான். படம் வரையப்பட்டு வந்தது. அதில் அவனுக்கு மிகையாக நெற்றியில் இருந்த ஒரு கண்ணைக் கரிகாலன் தனது பாதத்தால் மிதித்து அழித்தான். அப்பொழுதே பிரதாபருத்திரன் நெற்றிக் கண்ணை இழந்தான். செருக்கு அழிந்த பிரதாபருத்திரன் கரிகாலன் கட்டளையை நிறைவேற்றினான்.
197
தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திலா முகரி யைப்படத்
தெழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்
றிங்க ழிக்கவே அங்க ழிந்ததும். 20
கலிங்கத்துப் பரணி
முக்கண்ணன் சிவன் கேள்விப்பட்டோம் சரி மானிடருக்கு முக்கண் இருக்குமா?

No comments: