Wednesday, August 30, 2006

சிந்தனைக்கு

வில்லது வளைந்த தென்றும் வேழம துறங்கிற் றென்றும்
வல்லியம் பதுங்கிற் றென்றும் வளர்கடா பிந்திற் றென்றும்
புல்லர்தம் சொல்லுக் கஞ்சி பொறுத்தனர் பெரியோ ரென்றும்
நல்லதென் றிருக்க வேண்டாம் நஞ்செனக் கருத லாமே.

வில் வளைந்து கொடுத்தல், யானை நித்திரை செய்தல், புலி பதுங்குதல் கிடாய் பின்வாங்குதல், கீழ்மக்கள் சொல்லுக்குப் பயந்து பெரியோர் பொறுமை யோடிருத்தல் இவைகள் யாவும் நன்மை யென்று நினைக்கக்கூடாது, விஷமென்றே சிந்திக்க வேண்டும்.

No comments: