இது எந்த அளவிற்கு சாத்தியம்
- ஒருவர் தனது போட்டோவை போலி பட்டா பாஸ்புத்தகத்திலும் ஒட்டி கொண்டு வந்தால் அந்த ஆவணத்தை பதிவு செய்யலாம் அல்லவா
- இவர் கிரயம் பெற்ற ஆவணத்தில் அந்த போட்டோ எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் பசை பழுதாகி போட்டோ அந்த ஆவணத்தை விட்டு கழன்று விட்டால் என்ன செய்வது
- சிறு வயதில் கிரயம் பெற்று வயதான காலத்தில் விற்றால் எப்படி அடையாளம் தெரியும்.
- அனைத்து நில உரிமையாளர்களது போட்டோ அவரது வாரிசுகள் அவர்களது போட்டோ நில உரிமையாளர்களது முழுவிபரம் அவருக்கு எந்த எந்த ஊர்களில் சொத்து உள்ளது அதன் புல எண் பரப்பு அவரது குடும் அட்டை எண் கல்விதகுதி அவரது சாதி தொழில் டிரைவிங் லைசென்ஸ் எண் போன்ற வற்றை கம்யூட்டரில் ஏற்றி இணைய தளத்தில் வைத்துவிடலாம்.
- இதனால் ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்கள் யார் என தெரியவரும் மேலும் பினாமிகள் வரமல் தடுக்கலாம்.
- அவர் நிலத்தை விற்றவுடம் அவரது சொத்துப்பட்டியலில் இருந்து நீக்கி சொத்தை பெற்றவர் சொத்துப் பட்டியலில் சேர்த்து விடலாம் அதே நேரத்தில் ஆவணப் பதிவு எண்ணையம் சேர்த்து விடலாம் . இன்றுள்ள நடைமுறைப்படி ஒரு வெள்ளைத்தாளில் பதிவு செய்து 8 விழுக்காடுகளுக்குள்ள தொகையை சார்பதிவகத்தில் செலுத்திவிடாலம் முத்தரைத்தாள் மோசடியும் இங்கு வராது. அல்லது பெயரளவிற்கு 100 மதிப்புக்கு ஒருதாள் வாங்கிக் கொள்ளலாம்
No comments:
Post a Comment